அனுபவம்

ஆயிரம் உறவுகள் நம்மை தேடி வந்தாலும் நமக்கு பிடித்த உறவினை நாம்தான் தேடி செல்ல வேண்டும் !


உன்னை மற்றவர்கள் புரிந்துகொள்ளும்வரை  பொறுமையாய் இரு !
எளிதில் புரிந்து கொள்பவர்க்கு உன்னை பற்றி முழுமையாக தெரியாது !

    
அழகை ரசி, அடைய நினைக்காதே ! 
அழகாக இருப்பவர்களெல்லாம் நல்லவர்களும் கிடையாது !


வறுமைகள் வரும்போது சொந்தங்கள் நெருங்குவதில்லை !
சொந்தங்கள் நெருங்குது என்றால் அங்கெ வறுமைகள் இல்லை ..


உயிர் பிரியும் நேரத்தைவிட
   உண்மையான உறவு   பிரியும் நேரம் கொடுமையானது ! 


சந்தேக சன்னலை பூட்டிவிடு 
  நீ சத்திய பாதையில் நடந்திடு !


காலங்கள் தேய்திடலாம்,
 வேதனைகளும் சோதனைகளும் உன் வாழ்வில் அணையாய் சேர்ந்திடலாம் 
 நம்பிக்கை மட்டும் சேர்க்க மறக்காதே !!



ரோஜா என்பது அழகான பூ ! 
   அவ்வளவு அழகான பூ காம்பில் முள் இருக்கும்போது, 
   இவ்வளவு அழகான உங்களுக்கு 
ஏன் என் மேல் கோபம் இருக்க கூடாது  ?


4 comments:

  1. நல்ல தத்துவங்கள் போன்ற அறிவுரை வாழ்த்துக்கள் நண்பரே...
    நமது பதிவு My India By Devakottaiyan

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா, தங்களின் படைப்புகளும் மிக அருமை !

      Delete
  2. நல்ல அனுபவங்கள், வாழ்த்துகள் ..

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழரே! நேரம் இருந்தால் மேலும் எனது படைப்புகளை பார்க்கவும்

      Delete